இன்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா..?

  • இந்தியா, இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
  • இந்திய அணி 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா, இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. 1-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளது .

இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். புனேவில் இன்று இரவு ஏழு மணிக்கு போட்டி தொடங்குகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்க உள்ளது.

author avatar
murugan