கள்ள காதலனுடன் கணவனை கொன்ற மனைவி…!

கள்ள காதலனுடன் கணவனை கொன்ற மனைவி…!

மதுரையை அடுத்த ஜெய்ஹிந்த்புறத்தை சார்ந்தவர் தென்னரசு . இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் காருக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். தென்னரசு அவரிடம்  வாகன ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை செய்து வந்தார்.

இதை தொடர்ந்து சரவணனுக்கு , தென்னரசு மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் சரவணனை தென்னரசு வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரவு தென்னரசு தூங்கி கொண்டு இருந்த போது விஜயலட்சுமி சரவணனை வரவைத்து தென்னரசுவின் கழுத்தை நெரித்து கொன்றனர்.

தென்னரசுவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால் மஞ்சள்காமாலையால்  இறந்ததாக மனைவி விஜயலட்சுமி கூறினார்.போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேதே  பரிசோதனைக்கு அனுப்பினார். பரிசோதனையில் தென்னரசு தொண்டை உடைந்து இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரியவந்து.இதை தொடர்ந்து இருவரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube