தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு  மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என்று  சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 32டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை, நாகர்கோவிலில் தலா 2 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment