பிக்பாஸ் பைனலுக்கு ஏன் வரவில்லை! ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த சரவணன்!

பிக்பாஸ் பைனலுக்கு ஏன் வரவில்லை! ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த சரவணன்!

நடிகர்  கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சரவணனும் ஒருவர்.
இவர் பிக்பாஸ் வீட்டில் வைத்து தான் பஸ்சில் செல்லும் போது, பக்கத்தில் உள்ளவர்களை உரசியுள்ளேன் என கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அனைவரிடமும் சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிலையில், சரவணன் இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சின் இறுதி நிகழ்ச்சிக்கு கூட சரவணன் வரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் இனி பிக் பாஸ் குறித்து பேச விரும்பவில்லை. எனது வாழ்க்கையில் அதையும் தாண்டி பல இருக்கிறது. என வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube