ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம்- அமித்ஷா

ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவை நிரூபிக்க ஆளுநர் 18 நாட்கள் அவகாசம் அளித்தார். ஆட்சியமைப்பதற்கான ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம் .
பாஜக, சிவசேனா கூட்டணி வென்றால் ஃபட்னாவிஸ் தான் முதல்வர் என தேர்தலுக்கு முன்பே கூறினோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் என்றபோது மறுத்து பேசாதவர்கள், தேர்தல் முடிந்தபின் வேறுமாதிரி பேசுவதை ஏற்க முடியாது.மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.