வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  ராகுல் காந்தி

வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  ராகுல் காந்தி

வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது .இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.ஒரு பகுதியாக இந்திய பிரதமர் மோடி நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், 20  இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Join our channel google news Youtube