தமிழகத்தின் பாஜக தலைவர் யார் ?விரைவில் அறிவிப்பு வெளியாகும் -முரளிதர ராவ்

தமிழக பாஜக தலைவர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து உள்ளது.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை சற்று பரிதாபமாகதான் உள்ளது.தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.ஆனால் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது.எனவே  தோல்விக்கு காரணம் கேட்டு பாஜக மேலிடமும் தமிழக பாஜ தலைவரை மாற்றவும் முடிவு செய்தது என்று தகவல் வெளியானது.

ஆனால்  தமிழக பாஜக தலைவராக தமிழிசை கடந்த  2014 ஆகஸ்ட் முதல் இருந்து வந்தவர் தமிழிசை. பின் தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.

எனவே தமிழக பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது.ஆனால் இந்த பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்..ராஜா. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்,  சி.பி. ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன், கே.டி. ராகவன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்துவருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இதனை தொடர்ந்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தேசிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தமிழக பாஜக தலைவர் யார் என்று  விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.