திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்? தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்? என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில்  அரசு அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் இதன் பின்னர் வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம்,  திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்? என்று கேள்வி எழுப்பியது.பின்னர் அக்டோபர் 12-ஆம் தேதி இது தொடர்பாக  பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment