தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஸ் செய்த இந்திய மகளிர் அணி..!

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி  ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் மரிசேன் காப் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 48 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மூன்று போட்டிகள் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட் வாஸ் செய்தது.

author avatar
murugan