இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கிறார்கள்-அமைச்சர் இமார்டி தேவி..!

  • வேறொரு நகரத்திற்கு செல்லும் நாம் மகன்களை பொறுத்தவரை, இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கத் தொடங்குவார்கள் என கூறினார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் இமார்டி தேவி, நம் மகள்கள் தங்கள் படிப்பிலோ அல்லது வேலைகளிலோ முன்னேற வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறோம்.

வேறொரு நகரத்திற்கு செல்லும் பெண்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் வேறொரு நகரத்திற்கு செல்லும் நாம் மகன்களை பொறுத்தவரை, இரண்டு நண்பர்கள் சந்திக்கும் போது அவர்கள் பீர் குடிக்கத் தொடங்குவார்கள் என கூறினார்.

பெண்கள் தனது வயதைப் பொருட்படுத்தாமல் படிப்பது முக்கியம் என்று அமைச்சர் கூறினார். அதற்கு தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை கூறினார். “என்னைப் பாருங்கள், நான் குழந்தையாக இருந்தபோது நன்றாகப் படிக்கவில்லை, ஆனால் நான் என் வாழ்க்கையில் பிற்காலத்தில் படித்தேன். எனவே இதேபோல் ஒரு பெண் தன் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.” என  கூறினார்.

author avatar
murugan