ஆளுநராக பதவி ஏற்பது எப்போது? தமிழிசை தகவல்

தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன் என்று தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தமிழகத்திற்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்.அரசியல் களத்தில் இருந்து வெளியேறவில்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவுள்ளேன் .தெலங்கானா அதிகாரிகள் ஆலோசனை செய்த பிறகு பதவியேற்கும் நாள் முடிவு செய்யப்படும் என்று  தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.