இது என்னடா புதுசா இருக்கு! திருக்குறள் சொன்னால் பிரியாணி குடுக்கிறாங்களாம்!

திண்டுக்கல்லில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுமையான போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர்.
திண்டுக்கல்லில் உள்ள முஜீப் பிரியாணி கடையில், வரும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர்.
அன்று குழந்தைகள் மெய்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில், 5 நிமிடங்களில் 5 திருக்குறளை ஒப்புவித்தல் அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இப்போட்டி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.