குடியுரிமை திருத்த சட்டத்தால் என்ன பிரச்சனை ? ராகுலுக்கு ஜே.பி.நட்டா கேள்வி

  • குடியுரிமை திருத்த சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது.
  • குடியுரிமை திருத்த சட்டத்தால் என்ன பிரச்சனை என்பதை 2 வாக்கியங்களில் ராகுல்காந்தி தெரிவிக்க வேண்டும் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் என்ன பிரச்சனை என்பதை 2 வாக்கியங்களில் ராகுல்காந்தி தெரிவிக்க வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல்காந்தி இந்திய மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது என்று தெரிவித்தார்.