திருமணம் முடிந்தால் பெண்கள் என்ன அடிமையா ? பத்திரிகையாளர்களை விளாசிய சாயிஷா !

நடிகை சாயிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை. இவர் நடிகர் ஆர்யாவை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் “காப்பான்” படம் இன்று வெளியாகி உள்ளது. அதில் நாயகனாக சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சாயிஷா காப்பான் படத்தின் ப்ரோமோஷனுக்காக செல்லும் போது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் திருமணத்திற்கு பிறகும் நடிப்பீர்களா என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.அதற்கு அவர் மைக்கை நீட்டினால் முதலில் இந்த கேள்வியை தான் கேட்பீர்களா என்றும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கணவருக்கு அடிமையாக தான் இருக்க வேண்டுமா என்று பத்திரிகையாளர்களை கடுமையாக விளாசியுள்ளார்.