என்னடா திருடனுக்கு வந்த சோதனை! உஷாரான கடை உரிமையாளர்!!

கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை நடத்தி வந்தார் ஜெயராஜ். நேற்று இரவு கடையை மூடி விட்டு, காலை வந்து பார்த்த பொது கடையில் உள்ள அணைத்து பொருட்களும் சிதறி கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே வந்த திருடர் ஒருவர், கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த நபர், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தினார்.

Image result for உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா?" கடிதம் எழுதி வைத்த திருடன்

மேலும் கல்லாவில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் ” உயிரை பணய வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.