என்ன ஒரு பாசப்பிணைப்பு! பாரதிராஜாவிடம் இருந்து பொன்னாடையை பறித்த சிவகுமார்!

சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குனர் பாரதிராஜா, சிவகுமார், பாக்யராஜ் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, சிவகுமாருக்கு பொன்னாடை போர்த்த சென்றார். அப்போது பாரதிராஜாவிடம் இருந்து அந்த பொன்னாடையை பறித்து, அதனை பாரதிராஜாவுக்கே போர்த்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் நடைபெற்ற, இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு, அங்கு வந்த பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.