இஷாந்த் சர்மா ,உமேஷ் யாதவ், குலதீப் யாதவ் பந்து வீச்சில் திணறிய வெஸ்ட் இண்டீஸ்!

இந்திய ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ம் தேதி நடைபெற உள்ளது.இப்போட்டிக்கு முன் பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 , லோகேஷ் ராகுல் 36 ரன்னிலும் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ரஹானே 1 ரன்னில் வெளியேறினர்.இதை தொடர்ந்து நிலைத்து நின்ற ரோஹித் மற்றும் புஜாரா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய புஜாரா சதம் விளாசினார்.பின்னர் இந்திய அணி 297 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்த போது டிக்ளர் செய்தது.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா ,உமேஷ் யாதவ் , குலதீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை பறித்தனர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் 84 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது.களத்தில் விஹாரி , ரஹானே உள்ளனர். இன்று மூன்றாவது மற்றும் கடைசிநாள் போட்டி நடைபெற உள்ளது.இந்திய அணி 200 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan