தேர்தல் ஆணையம் பிறப்பித்த திடீர் உத்தரவு !மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி

கொல்கத்தாவில் தாகூர்புக்கூரில் இருந்து தாரதலா வரை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்  பேரணி நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். இதில், முக்கியமாக மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.இதனால்  நாளை நிறைவடைய இருந்த பிரச்சாரங்கள் அனைத்தையும் இன்று இரவு பத்து மணியோடு முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் தற்போது கொல்கத்தாவில் தாகூர்புக்கூரில் இருந்து தாரதலா வரை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது.

Leave a Comment