மேற்குவங்க C.B.I விசாரணை…. உச்சநீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல்…!!

மேற்குவங்க காவல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் ராஜீவ்குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு சி.பி.ஐ இன்று உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் சி.பி.ஐ சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment