குடியரசு தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபருக்கு வரவேற்பு

  • பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தார்.
  • பிரேசில் அதிபர் பொல்சொனரோவை  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர். 

இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நேற்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு  இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர்.இதனையடுத்து இன்று பிரேசில் அதிபர்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசினார்.   இதன் பின் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர்.அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் அரசு மரியாதை வழங்கப்பட்டது.