சிகாகோ விமான நிலையத்தில் ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு..!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி  ரவீந்திரநாத் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் அரசுமுறை பயணமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகாகோ சென்றார்.
சிகாகோ விமானநிலையம்  வந்தடைந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விமானநிலையத்தில் காத்து கொண்டு இருந்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பூங்கொத்து கொடுத்தும் ,மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சிகாகோவில் உள்ள குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

author avatar
murugan