சென்னை உட்பட 14 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான  மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை ,விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி மற்றும் நெல்லை  உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
murugan