ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறுகையில் ,ராஜபக்ச அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் .ஆனால் நடுநிலை வகிப்பது என்பது அராஜகம் வெற்றி ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.