கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தியாவில் கொரோனா தோற்றால் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பொருளாதாரத்தில் இந்தியா கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும், அதேநேரம் இந்திய பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றதாக கூறினார். மேலும், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டுப்போம் எனவும் தெரிவித்தார்.