சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம் : நாசா

வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2 விண்வெளி வீரர்களை, விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம், நாசாவை சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகியோர் விண்ணில் பறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் வானிலை சாதகமான சூழ்நிலையில் இல்லாததால், நாசா மாற்றும் ஸ்பேஸ் எக்ஸ், இத்திட்டத்தை தள்ளி வைத்தது. 

இந்நிலையில், 2 வீரர்களை சுமந்து கொண்டு இன்று ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து தெரிவித்துள்ள நாசா, ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன்9 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். 

இதற்காக வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம். இன்று ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலும், நாளை ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது திட்டமும் உள்ளது என கூறியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.