நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம்-கே.எஸ்.அழகிரி 

  • இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக திமுகவுடன் இன்று  காலை  சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் பின்னர்  தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment