கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம்…! அமைச்சர் தங்கமணி

கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  மின்கோபுரம் பற்றி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. விளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க அதிக இழப்பீடு தருவதாக அரசு கூறியுள்ளது. மாநில அரசுதான் மின்சார வாரியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.
அதேபோல்  கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம். இதற்குமேல் மத்திய அரசு என்ன எதிர்ப்பாக்கின்றது என்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment