நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்-மு.க.ஸ்டாலின்

சென்னையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது பேசுகையில்,  தேனி மக்களின் எதிர்ப்பை மீறி, வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியது கண்டனத்திற்குரியது.திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு முதல்வர், துணை முதல்வர் உரிய அழுத்தம் தர வேண்டும் .

தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.மிகச்சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது என்று பேசினார்.