பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம்- காஜா முயீனுத்தீன் பாகவி

எல்லா வகைகளிலும் சேர்ந்து செயல்பட முழுமையான பங்களிப்பு தருவேன் என ரஜினிகாந்த் கூறினார் என்று காஜா முயீனுத்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதன் பின்னர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  எங்கள் நியாயங்களைப் புரிந்து கொண்டார்.குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம் .மக்களின் அச்சத்தைப் போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என ரஜினி எங்களிடம் கூறினார் என்று தெரிவித்தார்.