தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி -அமைச்சர் வேலுமணி

ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள்.சென்னையில் எந்த ஐ.டி. நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லவில்லை. ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை.
ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை போல் இந்த குடிநீர் பிரச்சனையை கையாள வேண்டும். அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.