கண்டலேறு அணையில் நீர் திறப்பு…தமிழக எல்லையில் மலர் தூவி வரவேற்பு…!!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற  ஆந்திர மாநில அரசு கடந்த 7ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை திறந்து விடப்பட்ட தண்ணீர்  தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.

தமிழக ஏழைக்கு வந்த நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர் இந்த நீர் இன்று மாலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின்படி ஜூன் முதல் அக்டோபர் வரை 8  டிஎம்சி தண்ணீரும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment