பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு..வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்.!

பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு..வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்.!

பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு, வெள்ளப்பெருக்கு அபாயத்தால் மக்கள் வெளியேற்றம்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தற்போது, வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழைபெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய இரு அணைகளும் வெள்ள அபாய அளவை எட்டியது. இந்நிலையில், அணையில் இருந்து பரளி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கரையோரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube