கொரோனா பரவலுக்கு கழிவு நீர் ஒரு காரணமாக உள்ளது- ஐஐடி விஞ்ஞானிகள்!

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து காந்திநகர் ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், அந்த கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு உறுப்பான SARS-CoV-2 படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸின் தன்மையை விட, மே 27-ந் தேதி வைரஸின் தன்மை அதிகமாக உள்ளது என தெரிவித்தனர்.

இதற்கான காரணம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து தினமும் 10 கோடியே 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் வருகிறது. மேலும், இந்த கழிவுநீர் மூலம் கொரோனா பரவுவது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இத்தாலியை தொடர்ந்து, தற்பொழுது இந்தியாவிலும் கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என தெரிவித்த விஞ்ஞானிகள், அதை எப்படி தடுப்பது என்று மேற்கொண்டு ஆய்வுகள் மூலம் தெரியவரும் என தெரிவித்தனர்.