Election Breaking: பெரம்பூரில் வாக்கு இயந்திரம் மாறி வந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நல்ல போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பெரம்பூர்  வாக்கு எண்ணும் மையத்திற்கு வடசென்னை மக்களவை வாக்கு இயந்திரமும் வடசென்னை மையத்திற்கு பெரம்பூர் வாக்கு இயந்திரமும் தவறாக வந்ததால் வாக்கு எண்ணும்  மையத்தில் உள்ள முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. அங்குள்ள கட்சி முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும்  அலுவலர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்த 2 பெட்டிகள் எப்படி தவறாக வந்தது என்று சரிபார்க்கப்படும் என்று தெளிவுபடுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.

Leave a Comment