நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு – இன்று விசாரிக்கிறது நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.இதையெடுத்து மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூடியது. ஆனால் சட்டப்பேரவை கூடிய சில மணி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நடைபெற இருந்த கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தாமதம் செய்து வருவதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மனு தாக்கல் செய்தார் .இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.வழக்கின் விசாரணை  க இன்று  காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து.