சூப்பரான கதைக்களத்துடன் களமிறக்க காத்திருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி – விஷால் கூட்டணி!

இயக்குனர் சமுத்திரக்கனி நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, என தரமான படங்களை இயக்கியும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் தமிழ் திரையுலகில் சமூக பொறுப்புள்ள மனிதராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது நாடோடிகள் 2 படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தை அடுத்து சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய ஒரு கதைக்களத்தை படமாக்க உள்ளாராம். அந்த படம் சிவன் என்கிற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்கள் இருவரும் பாயும் புலி படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.