வைரல் வீடியோ: ஒரு பூனை சாலையை கடக்க வாகனங்களை ஓரங்கட்டிய போலீசார்.!

  • ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
  •  பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.இதனால் போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார்.

இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும் இல்லை.

சாலை விபத்துகளில் மனிதன் இறப்பது செய்தியாக வருகிறது .ஒரு நாளைக்கு சாலைவிபத்துகளில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் என்று செய்தித்தாள் அல்லது மற்றவர்கள் மூலம் நம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் தினமும் உலகில் ஆயிரக்கணக்கான விலங்குகள் இதுபோன்ற சாலை விபத்துகளால் உயிர் இழக்கின்றனர். அதுபற்றி மனிதர்களாகிய நாம் யாரும் கவலைப்படுவதில்லை அதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை, காரணம் அவற்றை ஒரு உயிராக மதிப்பதில்லை .

இந்நிலையில் ட்விட்டரில் ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீசார் ஒருவர் பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.

இதனால் அந்த  போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார். இந்த வீடியோ அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத இந்தக் காலத்தில் ஒரு பூனையாக டிராபிக்கை நிறுத்தி உதவி செய்த அந்த போலீசாருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
murugan