நடிகர் விஜய் சேதுபதி நல்ல நடிகர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட. மிகவும் சாதரணமாக எல்லோரிடத்திலும் பழகக்கூடியவர்.
தன்னை மிக பெரிய நடிகர் என்ற கர்வத்தை எங்குமே வெளிபடுத்தமாட்டார் , சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஒருவரை கேள்வி கேட்க, வேண்டும் என்றால். யாரை? என்ன கேட்பீர்கள்?’ என கேட்டபோது.
அதற்கு நடிகர் விஜய் சேதுபதி ‘நிறைய பேர் உள்ளனர், அவர்கள் பலரும் மிகவும் வயதானவர்கள், இந்த வயதிலும் மக்களுக்கு நல்லது செய்யாமல் பணத்தின் பின்னாடி ஓடுபவர்கள் என அரசியல் வாதிகள் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்தினார் .
அவர்களை எல்லாம் நாக்கை பிடுங்குற மாதிரி கேட்கனும்’ என்று விஜய் சேதுபதி ஆவேசமாக பதிலளித்தார்.