தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வரிடம் மனு

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வரிடம் மனு

திரையரங்குகளை திறக்க வலியுறுத்தி  திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.இதில் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.அதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் திரையரங்குகளை திறக்க வலியுறுத்தி முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர். 

Join our channel google news Youtube