உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இதன் பின்னர் இன்று  தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் என்றும்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.இந்த கூட்டத்தில் பெருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.