பணம் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவதாக மதுமிதா மிரட்டல்! விஜய் டிவி போலீசில் திடீர் புகார்!

பணம் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவதாக மதுமிதா மிரட்டல்! விஜய் டிவி போலீசில் திடீர் புகார்!

Default Image

பிக் பாஸ் போட்டி மூன்றாவது சீசன், விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில் வாராவாரம் எலிமினேட் செய்து வருவது வழக்கம். இதில் போட்டியாளர் சரவணன் திடீரென பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சென்ற வாரம் மதுமிதா, தன் கையை அறுத்துக்கொண்டதால் பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கிண்டி காவல் நிலையத்தில், மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ மீதம் உள்ள சம்பளபாக்கியை தராவிட்டால் தான் தற்கொலை செய்துவிடுவேன் என மதுமிதா மிரட்டுகிறார்,’ என்றும், ‘ மதுமிதா பிக் பாஸ் வீட்டினுள் தன் கையை அறுத்து கொண்டதால் பிக் பாஸ் விதிமுறைகளை மீறியதாக கூறித்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube