பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு  அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.ஒரு அரசியல் கட்சியே தவறாக முடிவு எடுக்கிறார்கள்,பின்னர் திருத்தி கொள்கிறார்கள்.அப்படி இருக்கும்போது ஒரு நடிகர் பேசுறத நாம பெரிசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அதேபோல் சினிமா துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது,எல்லாம் அனுமதிபெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.தயவு செய்து இதற்கு முன்னாள் உள்ள விஷயங்களை பேசி ,ஒருத்தருக்கொருத்தர் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube