இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி!மைதானத்தில் மகனுடன் பார்த்து ரசிக்கும் விஜய் மல்லையா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும்  போட்டியை காண விஜய் மல்லையா சென்றுள்ளார்
இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 ஆம் தேதி  நீதிமன்றம் வழங்கியது.
பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு  விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.இதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிவருகிறது.இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.இந்த போட்டியை காண விஜய் மல்லையா சென்றுள்ளார்.பின் அங்கு செய்தியாளர்களிடம்,நான் இங்கு கிரிக்கெட் பார்க்கவே வந்தேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.விஜய் மல்லையாவுடன் அவரது மகன் சித்தார்த் மல்லையாவும் சென்றுள்ளார்.