விஜய் திவாஸ் தினம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை …!

உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஜோதிக்கு  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடந்த 1971–ஆம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16–ஆம்  தேதி நாடு முழுவதும் ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் வெற்றி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் வருடா வருடம் மரியாதை செலுத்தப்படும்.இந்நிலையில் இந்த வருடமான இன்று  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Comment