‘ அவரது உடல் நிலை சீராக உள்ளது’ – அருண் ஜெட்லீயை பார்த்த பின்பு வெங்கையா நாயுடு பேட்டி!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லீயை நேரில் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் விசாரித்து வந்துள்ளார்.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அருண் ஜெட்லீயின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைக்கிறது.’ என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.