நடந்து சென்று காய்கறி,மளிகை பொருட்கள் வாங்க வேண்டும்..வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.!

காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. இரண்டு கிலோமீட்டர் வரை நடந்து சென்று காய்கறி மளிகை பொருட்கள் வாங்கலாம்.

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும்.

இந்நிலையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். மேலும் இரண்டு கிலோமீட்டர் வரை நடந்து சென்று காய்கறி மளிகை பொருட்கள் வாங்கலாம். அத்தியாவசிய தேவையன்றி வருவோரை கேமரா மூலம் கண்காணிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.