தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வி.பி.சந்திர சேகர் நேற்று  தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர் 1961 -ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

இவர் ஓய்வுவிற்கு பிறகு பயிற்சியாளர், வரணையாளராகவும் இருந்தார்.தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் உள்ள காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளர் ஆவார்.மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை இதனால் குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது அவர் அங்கு தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.

இவரின் மரணம் இயற்க்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.