கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் வைரமுத்து

தமிழை மேற்கோள் காட்டுவதை விடவும், செயலில் காட்ட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கவிஞர் வைரமுத்து சந்தித்தார்.அப்பொழுது  திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் வைரமுத்து.
இதன் பின்னர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கலைஞருக்கான அருங்காட்சியகம் அனைத்து சிறப்பு வாய்ந்த அம்சங்களுடனும் அமையவுள்ளது. தமிழை மேற்கோள் காட்டுவதை விடவும், செயலில் காட்ட வேண்டும்.  கீழடியில் மிகப்பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். மேலும் பிரதமர் தமிழகத்திற்கு வந்த வருகையும் அவர் அணிந்திருந்த வேட்டி,சட்டையும் தமிழகத்திற்கு பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார்.