வைகோ,திருமாவளவன் தன்மானம் உள்ளவர்கள்…!அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி குறித்து எங்கள் நிலைப்பாட்டைதேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை தற்போது அவிழ்ந்துள்ளதால் எல்லோரும் உருண்டு ஓடிவிடுவார்கள். வைகோ,திருமாவளவன் தன்மானம் உள்ளவர்கள். ரஜினி,பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை.கூட்டணி குறித்து எங்கள் நிலைப்பாட்டைதேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment