விடாமல் துரத்தும் தேசத்துரோக வழக்கு..இன்று தீர்ப்பு..!!

மதிமுக கட்சியின் பொதுசெயலாளராக இருப்பார் வைகோ இவர் கடந்த 2011-ம் ஆண்டு  நடைபெற்ற நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அவருடைய பேச்சானது மத்திய அரசிற்கு எதிராகவும் ,விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்தது ஆக கூறி ஆயிரம் விளக்கு போலீசார் தேச தூரோக வழக்கை பதிவு செய்தனர்

அதன் பேரில் 2007 -ம் ஆண்டு ஏப்ரல் 4 தேதி புழல் சிறைக்கு அனுப்பட்டார்.அதன் பின்னர் மே 25 தேதியே ஜாமீனில் வெளியே வந்தார்.

இதன் பின் இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.கடந்த 2018  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-தேதி வைகோ மீது குற்றசாட்டு  பதிவு செய்யப்பட்டது இதன் படி  சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த மாதம் ஜூன் 19  தேதி நீதிபதி வழக்கின்  தீர்ப்பை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.இந்நிலையில் இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha